பெற்றோருக்காக திருமணத்துக்கு OK சொன்ன அனுஷ்கா!

னுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு இணைய தளங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.

அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. 2005–ல் சினிமாவில் நடிக்க வந்தார். பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ ஆகிய இரு சரித்திர படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

அனுஷ்காவுக்கு திருமணத்தை முடிக்க கடந்த இரு வருடங்களாக பெற்றோர் முயற்சித்து வந்தனர். ஆனால், திருமணத்துக்கு சம்மதம் சொல்லாமல் தள்ளிப் போட்டு வந்தார். நிறைய மாப்பிள்ளைகள் பார்த்தும் யாரையும் தேர்வு செய்யவில்லை. இதனால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர்.

அவர்கள் தொடர் நிர்ப்பந்தத்தால் தற்போது அனுஷ்காவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம். இதனால் குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. ஏற்கெனவே பார்த்த மாப்பிள்ளைகளில் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விரைவில் அனுஷ்காவுக்கு திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். நடிப்பதற்கு தடை போடாத மாப்பிள்ளைக்கே தலையை நீட்டுவாராம்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -