சுலைமான் றாபி-
நிந்தவூர் நெனசல அறிவகத்தினரால் 40 மாணவர்களுக்கு இலவச தகவல் தொழில்நுட்ப பயிற்சி நெறியினை அங்குராப்பணம் செய்து வைக்கும் நிகழ்வும், இவ்வறிவகத்தில் Auto-cad kw;Wk; MEB பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (09) நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யன்க் அமைப்பின் தலைவர் ஐ.எம். நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன். சட்டத்தரணிகளான ஏ.எம். நசீல், றியாஸ் ஆதம், இலங்கை போக்குவரத்துச்சபையின் கிழக்கு மாகாண பிரதம முகாமையாளர் ஏ.எல்.சித்தீக், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் உள்ளிட்ட அதிகள் கலந்து கொண்டனர்.
இதேவேளை 7,000 ரூபா பெறுமதியான இத்தகவல் தொழில் நுட்ப பயிற்சி நெறிக்கான கட்டணத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் 'மாணவர் மகிமை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பயில நிந்தவூர் நெனசல அறிவகம் சந்தர்ப்பம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)
.jpg)
.jpg)