நிந்தவூர் நெனசல அறிவகத்தினரால் இலவச ICT பாடநெறி!

சுலைமான் றாபி-
நிந்தவூர் நெனசல அறிவகத்தினரால் 40 மாணவர்களுக்கு இலவச தகவல் தொழில்நுட்ப பயிற்சி நெறியினை அங்குராப்பணம் செய்து வைக்கும் நிகழ்வும், இவ்வறிவகத்தில் Auto-cad kw;Wk; MEB  பயிற்சி நெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (09) நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

நிந்தவூர் பெஸ்ட் ஒப் யன்க் அமைப்பின் தலைவர் ஐ.எம். நிஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன். சட்டத்தரணிகளான ஏ.எம். நசீல், றியாஸ் ஆதம், இலங்கை போக்குவரத்துச்சபையின் கிழக்கு மாகாண பிரதம முகாமையாளர் ஏ.எல்.சித்தீக், நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம் உள்ளிட்ட அதிகள் கலந்து கொண்டனர்.

இதேவேளை 7,000 ரூபா பெறுமதியான இத்தகவல் தொழில் நுட்ப பயிற்சி நெறிக்கான கட்டணத்தினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீனின் 'மாணவர் மகிமை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பயில நிந்தவூர் நெனசல அறிவகம் சந்தர்ப்பம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -