உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்த கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ற்போது நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகள், அதனோடு தொடர்புபட்ட மேற்கொள்ளப்படும் கொலைகள் என்பனவற்றுடன் அன்மையில் பாலியல் வன்புனர்வு செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவுக்கு நீதி வேண்டியும் அச்செயல்களை கண்டிக்கும் வகையில் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கெதிராக ஒன்றினைவோம் என்ற தொணிப்பொருளில் கொழும்பு சட்டக் கல்லூரி மாணவர்கள் ஏற்பாடு செய்த கண்டன எதிர்ப்புப் நடவடிக்கை ஒன்று கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவின் உருவச்சிலைக்கருகில் இன்று (29) மாலை இடம் பெற்றது.

நூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்குபற்றிய கண்டன நிகழ்வில் மாணவர்கள் வாயை கறுப்புத் துணிகளால் கண்டியும், மெழுகுவர்த்தி கொழுத்தி அதனை ஏந்தி பாலியல் வன்புனர்வுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளுடன் தமது கண்டன எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.ச








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -