கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்!

ட்டக்களப்பு மாவட்டத்தின், கல்குடாத்தொகுதியில் இயங்கிவரும் சமூகசேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனம் ‘உதிரம் கொடுப்போம் உயிர்களைக்காப்போம்’ எனும் தொனிப் பொருளிலான இரத்ததான முகாம் ஒன்றை 2015.05.30ஆந்திகதி சனிக்கிழமை மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் நடாத்தியது.

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ஜனாப். ஏ.எம். அன்வர் (பிரதி அதிபர்) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய கலாநிதி Dr. கே. விவேக் தலைமையிலான வைத்தியசாலை குழுவினரும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இவ்இரத்ததான முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியதாக நிறுவனத்தின் செயலாளர் ஜனாப். எம்.ரீ. ஹைதர் அலி தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -