பொத்துவிலில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

பொத்துவில் நிப்றாஸ்-

பொத்துவிலில் கடந்த காலாமாக ஏற்பட்டிருக்கும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி இன்று (2015-05-08) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ”நாம் பொத்துவில்” எனும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டம் பொத்துவில் பெரிய பள்ளிக்கு முன்பாக ஜும்மா தொழுகையின் பின்னர் இடம்பெற்றது . இதில் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் இளைஜர்கள் பிரதேச வாசிகள் என பலரும் கலந்து கொண்டனர் .

இதில் கலந்து கொண்டோர்,

“ஏய் அமைச்சர்களே பாராளுமன்ற உறுப்பினர்களே மாகாண சபை முதல்வரே மாகாண சபை அமைச்சர்களே உறுப்பினர்களே கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் “   “கல்வி அமைச்சரே எமது ஏழை மாணவர்களுக்கு கருணை காட்டுங்கள் இலவச கல்வியை எங்களுக்கும் தாருமையா “   “பொத்துவில் மாணவர்களின் எதிர்காலம் எங்கே செல்கின்றது ?”   “தந்துவிடு தந்துவிடு எமது ஆசிரியர்களை தந்துவிடு , வேண்டாம் வேண்டாம் எமது ஊருக்கு துரோகம் வேண்டாம் “  “உப வளைய கல்வி பணிப்பாளரே இன்னும் ஏன் அக்கரைப்பற்றில் மண்டியிடுகிண்றீர்கள் ? எமது ஊர் மாணவர்களிட்கு அநியாயம் செய்யாதீர் “  “அதிகாரிகளே ஆசிரியரை தந்துவிடு ,அரசியல்வாதிகளே கல்வியிலும் அரசியலா ? வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்” போன்ற சுலோகங்களை ஏந்தியும்,

"வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும்" , "ஏழை மாணவர்களின் கல்வியை சுரண்டாதீர்கள்" போன்ற கோசங்களை எழுப்பியும் தங்களது போராட்டங்களை நடத்தினர்.

இறுதியாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் , “எமது போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட நாம் தயார் “ என நாம் பொத்துவில் அமைப்பினரும் பொதுமக்களும் ஆவேசமாக கூறினார்கள் . 

மற்றும் அரசியல்வாதிகளிடமும் கல்வி அதிகாரிகளிடமும் எமக்கு தீர்வு கிடைக்குமா எனவும் கேள்வி எழுப்பினர் .sa





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -