தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட சம்மேளன தலைவராக ஹாலித் ஹூசைன்!

அபூ இன்ஷப்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட சம்மேளன தலைவராக சம்மாந்துறையைச் சேர்ந்த ஹபீப் முஹம்மட் ஹாலித் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

22.05.2015 அன்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சிசீரகுமார தலைமையில் நடைபெற்ற வைபவத்தின் போதே இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த வைபவத்தில் அதிதிகளாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க மற்றும் மேலதீக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை ஹூசைனியா இளைஞர் கழகத்தின் தலைவராகவும் முன்னாள் சம்மாந்துறைப் பிரதேசத்துக்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவராவார்.

இவர் தற்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள 504 இளைஞர் கழகங்களினதும் தலைவராக அதாவது மாவட்ட சம்மேளன தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -