தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும்,பயன் பெரும் குடும்பங்களை விழிப்பூட்டும் கூட்டமும்!

அப்துல் அஸீஸ்​-
றக்காமம் பிரதேசத்துக்குட்பட்ட வறிய குடும்பங்களை சேர்ந்த யுவதிகளுக்காக தையல் பயிற்சி நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும், இவ்விடயம் தொடர்பாக பயன் பெரும் குடும்பங்களை விழிப்பூட்டும் கூட்டமும் இறக்காமம் பிரதான வீதியில் நேற்று முன்தினம் மாலை (03 ) இடம்பெற்றது.

இலங்கை புடவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தினால் அமைக்கப்படுள்ள இந்த பயிற்சி நிலையங்களின் ஊடக இறக்காமம் பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பம்களை சேர்ந்த யுவதிகள் கட்டம் கட்டமாக தொடர்ச்சியாக பயன்பெறவுள்ளனர்.

இறக்காமம் பிரதேச அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் எ.எம்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், புடைவை மற்றும் ஆடைகள் நிறுவனத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கல்முனை மாநகர சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா சதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான சீ.எம்.முபீத், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச நடவடிக்கைகள் பொறுப்பாளர் அன்வர் முஸ்தபா உட்பட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.(ந)








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -