ரணிலிடம் மன்னிப்பு கோர மாட்டேன்: மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை திட்டமிட்டு தகாத வார்த்தைகளால் திட்டவில்லை என்றும் அதனால் பிரதமரிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மனதின் தூண்டுதலினால் இப்படியான வார்த்தைகள் வெளியேறியதாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமருக்கு வாலை சுருட்டிக்கொள்ள நேரிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

எப்படியிருப்பினும் பிரதமரிடம் தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டார். 

கோட்டாபய மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் ஜனநாயக அரசியலுக்கு பொருத்தமற்றவர்கள் என வாசுதேவ நாணயக்கார கூறினார். 

எங்களுடைய அவசியம் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவது மாத்திரமே என்று அவர் தெரிவித்துள்ளார். 

எப்படியிருப்பினும் மஹிந்தவுக்கு நடத்தை சான்றிதழ் வழங்க மாட்டோம் என்றும் தங்களின் ஜென்ம எதிரி ஐக்கிய தேசியக் கட்சி என்றும் வாசுதேவ நாணயக்கார கூறினார். 

பெரும்பான்மை அதிகாரம் அற்ற தற்போதைய அரசாங்கத்தை வெளியேற்றிவிட்டு எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மஹிந்த – மைத்திரி இணைந்த அரசாங்கம் ஒன்று உருவாக வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -