ந.குகதர்சன்-
வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்கவின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸார் தமது பிரிவிற்குள் பல்வேறு வேலைத்திட்டங்களைச் செய்து வருகின்றது.
இதன் அடிப்படையில் இரவில் பயனிக்கும் துவிச்சக்கர வண்டிகளை அடையாளப்படுத்தும் நோக்கில் உங்களைப் பாதுகாப்பதே எங்களது கருசனை எனும் தொனிப் பொருளில் வாழைச்சேனை பொலிஸார் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டீக்கர்களை ஒட்டும் வேலைத் திட்டத்தினை ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேசத்தில் நடாத்தினர்.
செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் வாழைச்சேனை கிளை மற்றும் வாழைச்சேனை கோறளைப்பற்று வேல் விஷன் நிறுவனம் என்பவற்றின் அனுசரனையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன, வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சமரதிலக, செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் வாழைச்சேனை கிளை முகாமையாளர் எல்.ஜே.மைகல், செலிங்கோ காப்புறுதி நிறுவனத்தின் செங்கலடி கிளை முகாமையாளர் எஸ்.மதிவானன், வாழைச்சேனை கோறளைப்பற்று வேல்விஷன் நிறுவனத்தின் கணக்காளர் ரெஜினோல் மார்க் ஆகியோர் கலந்து கொண்டு துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டீக்கர்களை ஒட்டி வைத்தனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)