புத்தளம் மற்றும் பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் சேதம்!

பொலன்னறுவையில் வீசிய பலத்த காற்றினால் 6 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் புத்தளம் – சின்னப்பாடு பகுதியில் வீடொன்று சேதமடைந்துள்ளது.

நேற்று முதல் பெய்து வரும் மழை காரணமாக வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் மழை காரணமாக தப்போவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகளும் , தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்றும் திறந்து விடப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொடரும் மழை காரணமாக மன்னார் புத்தளம் பிரதான வீதியூடான போக்குவரத்து எழுவான்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -