ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் முறைப்பாடு.

ஜுனைட்.எம்.பஹ்த்-

01.04.2015 வியாழக்கிழமை அன்று காலை ஹிரு தொலைக்காட்சியில் காலை 07.30
மணிக்கு 985வது அங்கமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட
“பத்தரே விஸ்தரே” என்னும் பத்திரிகை
கண்ணோட்ட நிகழ்ச்சியில் மோட்டார்
சைக்கிளில் பயணிப்பவர்கள் முற்றாக
மறைக்கப்பட்ட தலை கவசம் அணிவதனை தடைசெய்ய வேண்டும் என்கின்ற,
பத்திரிகைகளில் வெளியான செய்திகளை ஒளிபரப்பு
செய்யும்போது “சிங்கள ராவய” எனும்
பெளத்த கடும்போக்கு அமைப்பு நடாத்திய ஓர் பத்திரிகை மாநாட்டை
ஒளிபரப்பியது. அந்த மாநாட்டில் கருத்து தெரிவித்த பௌத்த மதகுரு
“மாகல்கந்தே சுதந்த” அவர்கள்
முஸ்லிம் பெண்கள் அணிகின்ற
நிக்காபினை ஒரு ஆணிற்கு
அணிவித்து அந்த உடையினை
முற்றாக தலையை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த ஒருவருடன் ஒப்பிட்டுக்காட்டி
முஸ்லிம்களுடைய இஸ்லாமிய உடையாகிய நிக்காபினையும், பர்தாவினையும் முற்றாக
மூடிய தலை கவசத்தினையும் தடை செய்ய வேண்டும் என்று மிகக்கேவலமாக கருத்து
தெரிவித்தார்கள் முஸ்லிம்களுடைய
அடிப்படை நம்பிக்கையினை
கொச்சைப்படுத்தும் இவ்வாறான செயல்களை ஊடக சுதந்திரம்
என்கின்ற பெயரில் முஸ்லிம்களின் மத
உரிமையை கேவலப்படுத்துகின்ற இவ்வாறான ஒளிபரப்பு சேவைகளை
வெளியிடுவதனை ஆய்வு செய்து,
இவ்வாறான விடயங்களில் அரசாங்கம் அலட்சியமாக இருந்துவிடாமல் உரிய நேரத்தில்
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இல்லாது போனால் கடந்த அரசாங்கம்
ஆதரித்து வளர்த்தெடுத்த கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனாவைப் போன்று
இவ்வியக்கங்கள் சிங்கள, முஸ்லிம்
மக்களிடையே இன முறுகலை
தோற்றுவித்து பாரியா அழிவிற்கு இட்டுச்செல்லும் என்பதை
சுட்டிக்காட்டி எழுத்து மூலம் கடந்த
ஏப்ரல் மாதம் [06.04.2015] அன்று மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்
ஷிப்லிபாறூக் அவர்கள் அறிவித்ததனை தொடர்ந்து ஜனாதிபதி அவர்களின்
பிரத்தியோக செயலாளர் அவர்கள் இந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி
பாறூக் மிகவும் பாரிய குற்றச்சாட்டினைமுன்வைத்துள்ளார்,

எனவே இந்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொண்டு அதனுடைய
அறிக்கையினை தனக்கும், அதன்
பிரதியொன்றினை கிழக்கு
மாகாண சபை உறுப்பினர்
பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
அவர்களுக்கும் சமர்பிக்குமாறு
இலங்கை தொலைதொடர்புகள்
ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின்
பணிப்பாளர் நாயகம் அவர்களுக்கு 2015 மே மாதம் 08ம் திகதி
அன்று கடிதம் மூலம் பணிப்புரை
விடுத்துள்ளார்.

 அக்கடிதத்தினைது
பிரதியொன்றினை தனக்கு
அனுப்பியுள்ளார் என கிழக்கு
மாகாண சபை உறுப்பினர்
பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
தெரிவித்தார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -