கஹவத்தை நகரில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2012ஆம் ஆண்டில் தாயும் மகளும் கொட்டகெதன என்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக கருதப்பட்ட மூவருக்கு அண்மையில் நீதிமன்றத்தினால் விடுதலை வழங்கப்பட்டிருந்தது.
இதனை கண்டித்து பொதுமக்களினால் கஹவத்தை நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்ட நிலையில் ,பின்னர் அது காவற்துறையினரால் கலைக்கப்பட்டது.
இந்தநிலையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது ஒருவர் கைதுசெய்யப்பட்ட அதேநேரம் கொட்டகெதன கிராமத்தில் இருந்து ஆர்ப்பாட்டத்துக்காக கஹவத்தை நகருக்கு சென்ற பொதுமக்கள் காவற்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.sa
