மஹியங்கனை விபத்தில் 2 பொலிஸார் பலி: மூவர் படுகாயம்!

 பொலிஸார் பயணித்த வேன் ஒன்று கண்டி மஹியங்கனை பிரதான வீதியின் சேனாபிடிய பகுதியில் வைத்து டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

கலஹா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், உடதும்பர பகுதியில் உள்ள மரண வீடு ஒன்றுக்கு செல்லும் போதே விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்து மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.றி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -