திவிநெகும 'சிப்தொற' கல்வி புலமைப்பரிசில் வழங்கும் வைபவம் - 2015

எம்.ஜே.எம். முஜாஹித்-
ரசின் திட்டங்களினால் இன்று ஏழை மக்கள் பெரும் நன்மை அடைகின்றனர். பயன் பெரும் பொது மக்கள் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதுடன் ஒழுக்கமுள்ள சமூகமாக நாம் திகழ வேண்டும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.

திவிநெகும சிப்தொற கல்வி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சமூர்த்தி பெரும் குடும்பங்களின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு திவிநெகும தலைமைபீட முகாமையாளர் ஏ.எஸ்.எம். நயிமா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசுகையிலேயே பிரதேச செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது ஒரு மாணவருக்கு 16,000.00 ரூபா வீதம் 18 மாணவர்களுக்கு காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கணக்காளர் ஏ.எல். நஜிமுடீன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.எல். அஸ்லம், திவிநெகும உத்தியோகத்தர் எம்.எப். நவாஸ் உட்பட உயரதிகாரிகளும் மாணவர்களது பெற்றோர்பகளும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -