பொதுத் தேர்தலில் SLMC சார்பாக அம்பாரை மாவட்டத்தில் 3வேட்பாளர்கள்?

திர்வரும் பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக அம்பாரை மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் நிறுத்தப்படவுள்ளனர்.

இது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கட்சி முக்கியஸ்தர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்மாந்துறை ஐ.எல்.எம்.மாஹிர் மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -