தம்பலகாமம் சிராஜ் நகர் அரபிக் கல்லூரியினை பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் பார்வையிட்டார்!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
ம்பலகாமம் சிராஜ் நகர் அரபிக் கல்லூரியினை போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் பார்வையிட்டார்.

அதேவேளை, பிரதி அமைச்சரின் வேண்டுகோளினை ஏற்று கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரும் அங்கு கலந்து கொண்டார்.

பிரதி அமைச்சரின் சிராஜ்நகர் இணைப்பாளர் என்.எம்.சபியுள்ளாவின் வேண்டுகோளினை ஏற்று வருகை தந்த பிரதி அமைச்சர் மற்றும் மாகாண அமைச்சரும் அரபிக் கல்லூரியின் குறைபாடுகளை கேட்டறிந்தனர்.

கல்லூரி நிர்வாகம் பல்வேறு தேவைகளை முன்வைத்தனர். அவைகளை துரித கதியில் நிறைவேற்றித்தர முயற்சி செய்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -