பொதுபல சேனா மீது நடவடிக்கை எடுக்க வேணடாம் என்று சம்பிக்க கூறினார் - மஹிந்த அம்பலப்படுத்தினார்

பொதுபல சேனா போன்ற அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெற்றபோது அது தொடர்பாக அமைச்சரவையில் நான் கலந்துரையாடினேன். அப்போதெல்லாம் அந்த அமைப்புக்கு எதிராதக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என சம்பிக்க ரணவக்கவே வலியுறுத்தினார். 

அதனால்தான் அதுபோன்ற அமைப்புக்களுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்திருக்கின்றார்.

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்களித்துள்ள நோர்காணலில் இதனைத் தெரிவித்திருக்கும் மகிந்தராஜபக்‌ஷ, பொதுபல சேனாவின் செயற்பாடுகளில் சம்பிக்க ரணவக்கவுக்கும் பங்கிருக்கலாம் எனவும்சந்தேகம் வெளியிட்டார்.

“பொதுபல சேனாவின் செயற்பாடுகளால் அரசாங்கத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் முஸ்லிம்மக்கள் மத்தியில் தவறான மனப்பாங்கு ஏற்பட்டது. எதிர்க்கட்சியினர் இதனை சரியான முறையில்அடையாளங்கண்டு தமக்குச் சாதகமான முறையில் பயன்படுத்திக்கொண்டார்கள். இதன் மூலம்முஸ்லிம் வாக்குகள் எனக்குக் கிடைக்காமல் செய்யப்பட்டன. முஸ்லிம் வாக்குகள் எனக்குக்கிடைக்காமல்போனதுதான் எனது தோல்விக்கு முக்கிய காரணம்.

தமிழ் மக்கள் எனக்கு வாக்ளிக்கமாட்டார்கள் என்பது எனக்குத் தெரிந்தேயிருந்தது. அவர்கள் நீண்டகாலமாக பெரிதும் போற்றிய அமைப்பை நான் அழித்தொழித்தமையால் என்மீது அவர்கள்சீற்றமடைந்திருந்தார்கள். அதனால், அவர்களுடைய வாக்குகள் கிடைக்கும் என நான்எதிர்பார்த்திருக்கவில்லை.

ஆனால், முஸ்லிம் மக்களுடைய வாக்குகளையும் எனக்குக் கிடைக்காமல் செய்தமைக்கு பொதுபலசேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளே காரணம். 

பொதுபல சேனாவுக்கு எதிராகநடவடிக்கை எடுக்காமல் என்னைத் தடுத்தவர் சம்பிக்க ரணவக்கதான். அமைச்சரவையில் இதுதொடர்பில் ஆராயப்பட்டபோது, பொதுபல சேனாவுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கவேண்டாம் என சம்பிக்கதான் என்னை வலியுறுத்தினார்” எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்‌ஷ தெரிவித்தார்..
theindependent
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -