விவாதத்தை தடுப்பதற்கான நோக்கத்துடனே பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்படுத்தியுள்ளனர்- சம்பிக்க

ரசியலமைப்பு திருத்தசட்டம் தொடர்பான விவாதத்தை தடுப்பதற்கான நோக்கத்துடனே பாராளுமன்றத்தில் குழப்பநிலையினை ஏற்படுத்தியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பு திருத்த சட்டத்தை தடுத்து அவசரமாக பொது தேர்தலை நடாத்தி அதன் மூலம் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் சிலரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலரும் நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பு திருத்தசட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள சந்தர்ப்பத்திலே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமையும் சந்தேகத்திற்குரிய விடயமாகும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை 19ஆம் திருத்த சட்டத்திற்கமைய தேர்தல் முறைமை மாற்றத்தினை உட்படுத்தியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 20ஆவது அரசியலமைப்பு திட்டத்திற்கு ஹெல உறுமய ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -