கம்ப்யூட்டரைக் கொலை செய்த மனிதன்!

விசித்திரங்களின் தாய் நாடான அமெரிக்காவில் மற்றுமொரு விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலரடோ மாநிலத்தில் கைத்துப்பாக்கியால் கம்ப்யூட்டரை சுட்டுக் கொன்ற மனிதனை(?) போலீசார் பிடித்து வைத்துள்ளனர்.

கொலரடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறையால் ‘கம்ப்யூட்டரைக் கொலை செய்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த திங்கள் அன்று கொலரடோ நகர்ப்புற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லூகாஸ்(37) என்ற நபரைப் பிடித்து விசாரித்தனர்.

கடந்த சில மாதங்களாகவே சரிவர வேலை செய்யாத தனது கம்ப்யூட்டருடன் போராடி வந்த லூகாஸ், சரியாக வேலை செய்யாமல் தனக்கு துரோகம் செய்த கம்ப்யூட்டருக்கு(!!!) தக்க தண்டனை கொடுக்க முடிவு செய்து, தன் வீட்டிற்குப் பின்னால் உள்ள சந்துக்குள் அந்தக் கம்ப்யூட்டரைப் போட்டு, 8 முறை அதைக் கைத்துப்பாக்கியால் சுட்டு தனது கொலை வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.

கம்ப்யூட்டருக்கு தண்டனை கொடுத்த லூகாசுக்கு, தண்டனை வழங்க கொலரடோ நீதிபதிகள் காத்திருக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -