பலாங்கொட, ஜெய்லானி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்த மேலதிக தகவல் வருமாறு;
பலாங்கொட, ஜெய்லானி (கூரகளை) வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் பலவந்தமாக நுழைய முயன்ற சிங்கள ராவய அமைப்பினருக்கு பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பலாங்கொட, ஜெய்லானி (கூரகளை) வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் பலவந்தமாக நுழைய முயன்ற சிங்கள ராவய அமைப்பினருக்கு பொலிஸார் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் நுழைவதை தடுக்கும் முகமாக நீதிமன்ற தடை உத்தரவொன்றை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதாவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நீதிமன்ற தடை உத்தரவை பொலிஸார் சிங்கள ராவய அமைப்பினருக்கு வழங்கிய போதும், அதனை பொருட்படுத்தாமல், அந்த அமைப்பினர் வரலாற்று சிறப்பு மிக்க பகுதியில் நுழைய முற்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக தெரிவிக்கப்படும் மத தளம் ஒன்றை பலவந்தமாக அகற்றுவதே அவர்களின் நோக்கம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டினார்.
-மடவல
