இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்வதை நிராகரிக்கும் திஸ்ஸ அத்தநாயக்க!

னக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு செல்வதை நிராகரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டமை தொடர்பாக அல்ல, ஐக்கிய தேசிய கட்சியை விட்டு சென்றமை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதே தற்பொழுது அவசியமாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

ஜனாதிபதி உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கான அதிகாரம் உள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு சபாநாயகர் ஊடாக வேண்டுக்கோள் விடுக்கப்பட்டால் மாத்தரமே உறுப்பினர் ஒருவர் ஆஜராக வேண்டுமென திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் போது சபாநாயகரிடம் அறிவிக்க வேண்டும் என நேற்று சபாநாயகர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் வேண்டுக்கோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -