ரத்கம பிரதேச சபை தலைவர் மனோஜ் புஸ்பகுமார கொலையுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ ஹோட்டலில் வைத்து கடந்த மார்ச் 23ம் திகதி ரதகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தலைமறைவாக இருந்த இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்வத்த மற்றும் பத்தேகம பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலி நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
