பிரதேச கலாச்சார விழாவில் ஊடகவியலாளர்கள் பாராட்டி கெளரவிப்பு!

யு.எம்.இஸ்ஹாக்-

நிந்தவூர் கலாச்சாரப் பேரவையினால் இன்று நடாத்தப் பட்ட பிரதேச கலாச்சார விழாவில் நிந்தவூர் மண்ணுக்கு பெருமை சேர்த்த 60இற்கு மேற்பட்டோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர் . 

இதில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களான இலங்கை தேசிய தொலைக் காட்சி சேவையின் தமிழ் பிரிவு செய்திப் பணிப்பாளர் உமறுலெப்பை யாக்கூப், கலாபூஷணம் ஏ.எல்.எம்.சலீம் ஆகிய இருவரும் ஊடகவியலாளர்களாக பாராட்டி கௌரவிக்கப் பட்டனர் .

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியானி றிபா உம்மா ஜலீல் தலைமையில் நடை பெற்ற கலாச்சார விழாவில் ராஜாங்க சுகாதார அமைச்சர் எம்.ரீ.ஹசனலி,பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு ஊடகவியலாளர்களை பாராட்டி கௌரவித்தனர் . 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -