காத்தான்குடியில் குழாய் நீர் இணைப்பு பெற்றுக்கொள்வதற்கான உதவி வழங்கும் நிகழ்வு!

ஊடகப்பிரிவு-
காத்தான்குடி அல்-அதாலா பௌண்டேஷனின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று (11.04.2015) PMGG யின் மக்கள் அரங்கில் இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் MAHM.மிஹ்ழார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இத்திட்டத்திற்கான நிதியுதவியினை வழங்கிய அல்-கிம்மா நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் HM. ஜாபீர் நளீமி, அல்-கிம்மா நிறுவனத்தைச் சேர்ந்த MU. பசீர் மௌலவி, NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் நளீமி உட்பட அல்-அதாலா பௌண்டேஷன் நிறுவனத்தின் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ALM.சபீல் நளீமி, வித்யாகீர்த்தி MM.அமீரலி ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்கான நிதியுதவியினை ஓட்டமாவடி அல்-கிம்மா நிறுவனம் வழங்கியது.

இதன்போது மேற்படி குழாய் நீர் இணைப்பினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 20 பயனாளிகளுக்கு அதற்கான உதவிகள் வழங்கப்பட்டன.

இதேவேளை எதிர்காலத்தில் அல்-அதாலா பௌண்டேஷன், மேலும் பல பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் இந்நிகழ்வின்போது தெரிவிக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -