தம்பலகாமம் சிராஜ் நகர் அரபிக் கல்லூரி வீதியினை பார்வையிட்ட பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக்!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
ம்பலகாமம் சிராஜ் நகர் அரபிக் கல்லூரி வீதியினை போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் பார்வையிட்டார். 

பிரதி அமைச்சரின் சிராஜ்நகர் இணைப்பாளர் என்.எம்.சபியுள்ளாவின் வேண்டுகோளினை ஏற்று வருகை தந்த பிரதி அமைச்சர் மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளை நேரடியாகச் சென்று கேட்டறிந்தார்.

அதேவேளை, பொதுமக்களின் பிரதான தேவையாக இருக்கும் உள்ளக வீதிகளை புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை ஏற்றுக் கொண்ட பிரதி அமைச்சர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு வீதிகளுக்கு பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து கிறவல் இடுவதற்கு நிதி ஒதுக்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் அய்யூப்கான்,மற்றும் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -