ரணில் விக்ரமசிங்க அம்பாறைக்கு விஜயம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை மாவட்ட ஐக்கியதேசிய கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றினை மேற்கொள்வதற்காக எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுய்யதாக சம்மாந்துறைத் தொகுதிக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி தெரிவித்தார்.

இதன் போது பிரதேசங்களினதும், தொகுதிகளினதும், மாவட்ட ரீதியான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு அம்பாறை தயாகமகே மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -