வசதியற்ற குடும்பங்களுக்கு மலசல கூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு




பழுலுல்லாஹ் பர்ஹான்-

காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ்; வாழும் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பபுத்தும் நடவடிக்கைகளுள் ஒன்றாக மேற்கொள்ளப்பட்ட மலசலகூட வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் அனுசனையூடன் அமைக்கப்பட்ட 10 மலசலகூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 18 சனிக்கிழமை காத்தான்குடி வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் நிருவாகக் கட்டிடத்தில் நடைபெற்றது.

இதன் போது ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் பிரதிநிதிகளால் வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களின் ஆவணங்கள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் முக்கியஸ்தர்களும் ,ஊர் பிரமுகர்களும் ,பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -