பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ்; வாழும் குடும்பங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பபுத்தும் நடவடிக்கைகளுள் ஒன்றாக மேற்கொள்ளப்பட்ட மலசலகூட வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் அனுசனையூடன் அமைக்கப்பட்ட 10 மலசலகூடங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 18 சனிக்கிழமை காத்தான்குடி வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் நிருவாகக் கட்டிடத்தில் நடைபெற்றது.
இதன் போது ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் பிரதிநிதிகளால் வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களின் ஆவணங்கள் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ரோட்டரி கழகத்தின் கொழும்பு மிட்டவுன் கிளையின் முக்கியஸ்தர்களும் ,ஊர் பிரமுகர்களும் ,பொது மக்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)