பிரபல இஸ்லாமிய பாடகரும், திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவருமான நாகூர் ஹனீபா இன்று (08) சென்னையில் காலமானார்.சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
இஸ்லாமிய பாடல்களை உலகெங்கும் ஒலிக்கச் செய்து தனது குரலால் பலரது இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் பாடிய இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் மதங்களை தாண்டி அனைவரையும் கவர்ந்த பாடல்.
திமுகவில் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து மிகுந்த ஈடுபாடு கொண்டு, அக்கட்சியின் வளர்ச்சிக்கு தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திமுக தலைவர் கருணாநிதியுடன் நெருங்கிய நட்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நன்றி இந்நேரம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -