பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் வருடாந்த இஸ்லாமிய எழுச்சி மாநாடு!

இக்பால் அலி-
மாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் ஆகிய இணைந்து நடாத்தும் வருடாந்த இஸ்லாமிய எழுச்சி மாநாடு 03-04-2015 ஜும்ஆத் தொழுகையுடன் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக,  ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் தெரிவித்தார்.

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவரும் மற்றும் பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலின் தலைவருமான அஷ்ஷெய்க் என் பீ. முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி தலைமையில் நடைபெறும்.

இந்நிகழ்வில்;

அஷ்ஷெய்க் என்.பீ. முஹம்மது அபூபக்கர் சித்தீக் மதனி- சுயபரிசோதனை என்ற தலைப்பிலும், 

அஷ்ஷெய்க் எம். எஸ். அப்துல் வதூத்-உளத்தூய்மை என்ற தலைப்பிலும், 

அஷ்ஷெய்க் எஸ். எச். எம். இஸ்மாயீல்-அஹ்லுஸ் சுன்னாவின் அடிப்படைகள் என்ற தலைப்பிலும்,
 
அஷ்ஷெய்க் ஸபர் அஜ்வாத் பஹ்ஜி மதனி-சுவிட்சமான வாழ்வுக்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள் என்ற தலைப்பிலும், 

அஷ்ஷெய்க் அல்ஹாபீழ் எம். எச். எம். ஜஹான் பலாஹி-மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -