காணவில்லை!

நஸ்மி பாரிஸ்-
15 வயது மதிக்கத்தக்க 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் கெலிஓய பிரதேசத்தை சேர்ந்த மாணவனான சகோதரர் முஹம்மத் நியாஸ் அவர்களின் மூத்த மகனுமான முஹம்மத் நபீல் நேற்று முதலாம் தவணை பரீட்சியின் பெறுபேறுகளின் பின், பெறுபேறுகள் கிடைக்கப் பெற்று இம் மாணவன் வீடு சென்று கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளை பெற்றோரிடம் காட்டியபின், போதுமான திருப்தியின்மை காரணமாக சம்பந்தப்பட்ட மாணவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். 

பின்னர் குறித்த மாணவன் பெற்றோரிடம் நான் இனி வீட்டுக்கு வரமாட்டேன் என்று சொல்லவும் பெற்றோர் அதை பெரிதாக எடுக்கவில்லை.

பின்னர் இம் மாணவன் மாலை வீடு திரும்பாத நிலையில் இம் மாணவனை தேடும் விதத்தில் 10.04.2015 நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வீட்டிலிருந்து வெளியேறியமையும், நேற்று மாலை இம் மாணவன் பேராதெனிய ஜூம்மா பள்ளிவாயலில் இருந்ததாகவும் அப் பள்ளியில் குறிப்பிட்டனர்.

எனவே இம் மாணவனை குடும்பத்தார்களும் ஊர் சகோதரர்களும் பதட்ட நிலையில் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இச் சம்பவம் தொடர்பாக பெரதேனிய மற்றும் கண்டி போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம் மாணவனை பற்றி எங்காவது தகவல் கிடைத்தால் உடனடியாக அறியத் தரவும்.

(இச் செய்தியை ஏனைய நண்பர்களுக்கும்  பகிர்ந்து உதவுங்கள்)

தகவலை அறிய தருவதற்கு:

Mohamed Munzil: 0777891626
Mohamed Ishak: 0773708484
Mohamed Nazmy: 0779136116
Mohamed Nazeem: 0779311969
Mohamed Shifan: 0777552990
Mohamed Mufthi: 0772323713

செய்தி அறிவித்தல்:
கெலிஓய சகோதரர்கள்.


இதேவேளை இன்று இரவு 8.30மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக இம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கேட்ட போது,

குறித்த சிறுவன் இன்று மாலை கண்டெக்கப்பட்டுள்ளதாக சிறுவனின் உறவினர்கள் தெரிவித்தனர். இச்சிறுவன் குருநானகலில் அமைந்துள்ள தனது தந்தையின் கடைக்கு சென்ற வேளை வழியில் தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு சென்ற போது இச்சிறுவனை  தந்தையின் கடை ஊழியர்கள் அடையாளம் கண்டு அழைத்து சென்றதாகவும் குறிப்பிட்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -