பாராளுமன்ற உறுப்பினர் மாலனி பொன்சேகாவிற்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிடவில்லை என பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
அவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு அவமானம் ஏற்படுத்தும் வகையில் தன்னை திட்டியதாக மாலனி பொன்சேகா நேற்று குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்நிலையில் சுஜீவ சேனசிங்க அந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.
