தேர்தல் முறைமை மாற்றத்திற்கு பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும்!

தேர்தல் முறைமை மாற்றம் உட்பட 20ம் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றியதன் பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். 

கட்சித் தலைவர்களுடன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார் என எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபா டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் இவ் விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தேர்தல் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி அளித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -