வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

வவுனியா செய்தியாளர் திரு-
வுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை (17.03) பிற் பகல் 02.00 மணியளவில் வித்தியாலய அதிபர் திரு.சு.அமிர்தலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா வலயக் கல்விப் பணிமனை பொறியியலாளர் திரு.கு.சிவகுமாரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நகரசபை உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), உதவிக்கல்விப் பணிப்பாளர் ஜனாப் சுபைர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக ஆரம்ப கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.எம்.தேவசேனா, வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் திரு.ப.தர்மலிங்கம் அவர்களும் பாடசாலை மாணவர்கள், ஆசரியர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான விளையாட்டுப்போட்டி தொடர்ந்து மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை நிகழ்ச்சி பழைய மாணவர் நிகழ்ச்சி, பெற்றோர் நிகழ்ச்சி, விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -