சட்டவிரோத முதிரை மரக்குற்றிகளை மட்டக்களப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்!

ஏஎம் றிகாஸ்-

லொறியொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகுதி முதிரை மரக்குற்றிகளை மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த லொறியின் சாரதியும் உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சி.மஹலேகம் தெரிவித்தார்.

கித்துள் பிரதேச வனப்பகுதியில் வெட்டப்பட்டு மர ஆலையொன்றிற்கு எடுத்துச்செல்லப்பட்டவேளை வீதியில் விஷேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இம்மரக்குற்றிகளைக் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இம்மரக்குற்றிகளின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்கு வன வள பாதுகாப்புத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கரடியனாறு பொலிஸார் மேலும் கூறினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -