கோதபாய ராஜபக்ஸ தமது சவாலை இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை-அமைச்சர் ரவி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தமது சவாலை இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சொத்து விபரங்களை வெளியிடுமாறு தாம் விடுத்த பகிரங்க சவாலை, கோதபாய ராஜபக்ஸ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் குறித்து கோதபாய கருத்து வெளியிட்டதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் 12ம் திகதி ரவி கருணாநாயக்க, கோதபாயவின் சொத்து விபரங்களை வெளியிடுமாறு கோரியிருந்தார்.

சவால் விடுக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் பதில் எதனையும்அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மைப் போன்றே ஏனையவர்களையும் கருத வேண்டாம் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் எதிர்க்கட்சி எதிர்நோக்கிய நெருக்கடிகளை நிலைமைகளை தற்போதைய எதிர்க்கட்சி எதிர்நோக்க புதிய அரசாங்கம் விடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -