கைதான கபீர் முன்னாள் முதலமைச்சர் காரியாலயத்திலேயே பணி புரிந்தார்!

திருமலை அஹ்மத்-
னாதிபதி செயலக வாகன மோசடி தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள எம்.ஐ.அகமது கபீர் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீதின் பிரத்தியேக ஆளணியிலேயே பணி புரிந்தார்.

இது தொடர்பாக இணையத்தளத்தில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளித்துள்ள முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் கைது செய்யப்பட்டுள்ள கபீர் தனது பிரத்தியேகச் செயலாளராகப் பணிபுரிய வில்லை. என மறுப்புத் தெரிவித்துள்ளார். 

இது தர்க்கவியல் ரீதியில் சரி. எனினும் கபீர் முன்னாள் முதலமைச்சரின் பிரத்தியேக ஆளணியில் பொறுப்பு வாய்ந்த பதவியொன்றை வகித்து வந்தார். இது திருகோணமலை மாவட்ட மக்களுக்கு மட்டுமன்றி கிழக்கு மாகாண மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

எனவே, அவர் பிரத்தியேக செயலாளராகப் பணி புரியாவிட்டாலும் பொறுப்புவாய்ந்த பதவியொன்றை வகித்து வந்தார் என்பதே உண்மையான விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -