கடை­யொன்றை உடைத்து திருடிப் பொதி செய்த நிலையில் கடைக்­குள்­ளேயே நித்­திரை கொண்­ட திருடன்

டை­யொன்றை உடைத்து உட்­பு­குந்த திருடன் ஒருவன் பொருட்­களைத் திருடிப் பொதி செய்த நிலையில் கடைக்­குள்­ளேயே நித்­திரை கொண்­ட­தினால் மறு தினம் காலை கடை உரி­மை­யா­ள­ரிடம் அகப்­பட்டு மகி­யங்­கனை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட சம்­பவம் மஹியங்­கனையில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

மஹி­யங்­கனை புனித பூமி பிர­தே­சத்தில் அமைந்­துள்ள கடையின் யன்னல் கத­வினை உடைத்து உட்­பு­குந்த திருடன் ஒருவன் அங்­குள்ள பெறு­ம­தி­மிக்க பொருட்­களை இரு பைகளில் பொதி செய்­து­விட்டு குளிர்­பா­ன­மொன்றை அருந்­திய நிலையில் கதி­ரை­யி­லி­ருந்­த­வாறே நித்­திரை கொண்டான்.

மறு­தினம் காலை கடை உரி­மை­யாளர் வந்து கடையைத் திறத்­த­போது கடைக்குள் திருடன் உட் புகுந்­தி­ருப்­பது தெரிய வந்­தது.

கடை உரி­மை­யாளர் அதிர்ச்­சி­ய­டைந்த நிலையில் உள்ளே சென்று பார்த்த போது அங்கு ஒருவர் பொருட்கள் பொதி செய்த நிலையில் நித்­திரை கொண்­டி­ருப்­பதைக் கண்டார்.

உட­ன­டி­யாக கடை உரி­மை­யாளர் சம்­பவம் குறித்து மகி­யங்­க­ளைப்­பொலிஸ் நிலை­யத்­திற்கு முறைப்­பாடு செய்தார். இத­னை­ய­டுத்து அங்கு விரைந்த பொலிஸார் திரு­டனை தட்டி எழுப்பி கைது செய்­தனர்.

திரு­ட­னினால் பொதி செய்­யப்­பட்ட பொருட்­க­ளையும் பொலிஸார் மீட்­டனர்.

கைது செய்யப்பட்ட திருடன் பிரபல கேடி என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரனையின் போத தெரியவந்துள்ளது.metronews
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -