முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவில் இருந்த வாகனங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் சில மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எது எவ்வாறு இருப்பினும் இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரக, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரால், ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படுவது போன்று பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதிக்கும் வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
இதன் படி முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மஹிந்த ராஜபக்ஷவுக்கும் வழங்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.