தலதா மாளிகை வளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்தில் இருந்த தேசிய கொடியை அகற்றி சிங்கள கொடி என்ற பெயரில் வேறு கொடி ஒன்றை பலாத்காரமாக ஏற்றியுள்ளமை குறித்து கண்டி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலதா மாளிகையின் நிர்வாக செயலாளர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
தலதா மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பத்தரமுல்ல சுவர்ணசங்க நிதியம் என்ற அமைப்பினரால் இவ்வாறு தேசிய கொடி அகற்றி வேறு கொடி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.