மூதூர் பிரதேச செயலகத்தின் கலை,கலாச்சார விழா!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
ரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலை,கலாச்சார விழா (2015) இன்று 24 மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வீ.யூசுப் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.

பிரதேசத்திலுள்ள வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவு,விஷேட தேவையுடையவர்களுக்கான சக்கர நாற்காலி வழங்கள் அத்துடன் கர்ப்பினித்தாய்மார்களக்கான 2000 பெறுமதியான பொதிகளும் வழங்கப்பட்டதோடு மற்றும் பிரதேச மட்டத்தில் கலை,கலாச்சார போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும்,பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,உதவி தவிசாளர் எம்.எச்.ஹாஜா முகைதீன் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள்,மூதூh பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஏ.தாஹீர் மற்றும் சமூக மட்டத் தலைவர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -