எம்.வை.அமீர்-
கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிரேஷ்ட மாணவத்தலைவர்களுக்கான இரண்டு நாட்கள் கொண்ட வதி விட தலைமைத்துவப் பயிற்சி நெறி ஒன்று அண்மையில் சாஹிரா தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
பயிற்சி நெறியின் வளவாளர்களாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சன்சீர், பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச்.ஜவ்ஸி, டாக்டர் சப்ராஸ், பொறியியலாளர் ஏ.எம்.ஏ.சஜா மற்றும் டாக்டர் ஏ.ஆர்.சனுஸ் போன்றோர் கலந்து கொண்டனர்.
இறுதி நாள் நிகழ்வின் பிரதம அதிதியாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் அவர்கள் கலந்து கொண்ட அதே வேளை இரு நாள் அமர்வுகளிலும் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் அவர்களும் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எம்.ஏ.ரபீக், அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர் எம்.எம்.உதுமாலெப்பை உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.