அக்கரைப்பற்றில் சுதந்திர தின நிகழ்வுகள் -படங்கள்..


நிஸ்மி, அக்கரைப்பற்று-
மது நாட்டின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று புதன்கிழமை (04.02.2015) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.ஜஹ்பர் தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன. நிகழ்வுகளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எம்.ஜஹ்பர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைப்பதையும், வைத்தியர்கள்,நிருவாக உத்தியோகத்தர், தாதி உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மத்தியில் சுதந்திரத்தின் நன்மைகள் பற்றி உரையாற்றினார்.



நிஸ்மி, அக்கரைப்பற்று-

சுதந்திர இலங்கையின் 67வது சுதந்திர தினத்தை முன்னிடடு நேற்று புதன்கிழமை (04.02.2015) அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின வைபவங்கள் உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தலைமையில் நடைபெற்றது. உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் தேசியக் கொடியினை ஏற்றி வைப்பதையும், சுதந்திரத்தின் மகிமை பற்றி உத்தியோகத்தர்கள் மத்தியில் அவர் உரையாற்றியதோடு துஆப்பிரார்த்தனையும் இடம் பெற்றது., கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, நிருவாக உத்தியோகத்தர்களான எம்.எஸ்.பாறூக், எஸ்.ரி.அன்வர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியேகத்தர்கள் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டனர்.-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -