அகில இலங்கை தமிழ் மொழித்தின பரிசளிப்பு விழா! இராஜாங்க அமைச்சர் வேலாயும் பங்கேற்பு

ஏ.எஸ்.எம்.இர்ஷாத்-

கில இலங்கை தமிழ் மொழித்தின பரிசளிப்பு விழா பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் இன்று சனிக்கிழமை(21) கல்வி அமைச்சின் தமிழ் மொழிப்பிரிவு ஏற்பாட்டில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயும் கலந்து சிறப்பித்தார்.

பேராசிரியர் சபா ஜெயராசா, கல்வியமைச்சின் தேசிய மொழிகள் ம்றம் மானுடவியல் பிரிவு கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.எம்.ரத்நாயக்க, தமிழ் மொழிப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கிறேஸ் சடகோபன், தமிழ் மொழி பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் எஸ்.முரளிதரன், கல்வி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திவாகர், கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் விக்கிரமசிங்க உட்பட பிரதி உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்வி அமைச்சின் தமிழ் மொழி பிரிவால் வடாந்தம் வெளியிடப்படும் சஞ்சிகை கூர்மதி வெளியிட்டு வைக்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்;றிதழ் மற்றும் பதக்கங்களை பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் கே.வேலாயும் மற்றும் அதிதிகள் வழங்கி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -