வெற்றிலையின் பலத்தைப் பிரதிபலித்திருந்தது நுகேகொட நிகழ்வு- சுசில் பிரேமஜயந்த

க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த சில கட்சிகளினால் நுகேகொடவில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட கூட்டம் வெற்றிலையின் பலத்தைப் பிரதிபலித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முன்னிறுத்தப் கோரும் நுகேகொட கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதில், பெருந்தொகை மக்கள் கலந்து கொண்டமை கூட்டம் வெற்றியளித்துள்ளதாகக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரான சுசில் பிரேமஜயந்த தனது பொறுப்புக்களை கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்றார். அப்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -