புத்தளத்துக்கான பாராளுமன்ற பிரதிநிதியை வென்றெடுப்போம் -பிரகடணம் நிறைவேற்றம்

கொழும்பில் வாழ்கின்ற புத்தளம் சமூக ஆர்வலர்களினால் ஒரு கலந்துரையாடல் மூலம் சில முடிவுகள் கலந்தாலோசிக்கப்பட்டது.

பிரேரணை 01. சுயேட்சை பொதுக்குழுவொன்று உருவாக்கி அதில் அனைத்து கட்சியிலுள்ள வாக்கு வங்கிகளையுடைய பிரதான வேட்பாளர்களை களமிறக்கி, அரசியல் ஆர்வமுள்ள குழுக்களையும் இணைத்து பெரிய பள்ளியின் ஷூரா அடிப்படையில் மக்களின் ஆதரவோடு ஒரு பலமான சுயேச்சை கட்சியாக களமிறக்கி ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களை வென்றெடுத்தல் . (வென்ற பிரதிநிதி தன்னுடைய கட்சியுடன் இணைந்து அரசியல் பயணத்தை மேற்கொள்ளவும் முடியும்)

பிரேரணை 02. புத்தள அரசியலில் எந்த கட்சிக்கு மற்றும் எந்த வேட்பாளருக்கு அதிக வாய்ப்பு இருக்கின்றதென ஒரு ஆய்வொன்றினை மேற்கொள்ளல்.

பிரேரணை 03. முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் எமது ஊரின் எதிர்கால் அரசியல் குறித்து கொழும்பிலும்,புத்தளத்திலும் இரண்டு இராபோசன உணவுடன் கலந்துரையாடல்.

பிரேரணை 04. இதனைத்தொடர்ந்து புத்தளத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்களை ஏற்படுத்தல்.

இந்த விடயம் சம்பந்தமாக ஒரு குழுவொன்று ஏற்படுத்தப்பட்டு அதன் பொறுப்பாளராக சகோதரர் இல்ஹாம் மரிக்கார் அவர்களும், மற்றும் சகோதரர் ஜவாகிர் அவர்களும் நியமிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -