ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்த காலத்தில் நடந்த ஊழல் மோசடிகள் குறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அது சம்பந்தமான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு மிக விரைவில் இந்த முறைப்பாடுகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அஸ்கிரிய மாநாயக்கர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலஞ்சம் ஆணைக்குழுவுக்கு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஆவணங்களை சமர்ப்பிப்பது தற்போது நகைப்புக்குரிய செயலாக மாறியுள்ளது.
தவறு செய்தவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தி தண்டனை வழங்குவதில் தவறில்லை.
தவறு செய்யாத நபர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்கள் மோசடியாளர்களை என காட்டும் ஊடக கண்காட்சி நிறுத்தப்பட வேண்டும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
