மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழாவும் கௌரவிப்பும்




எம்.வை.அமீர்,எம்.ஐ.சம்சுதீன்-

ருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஓராண்டு நிறைவு விழா 2015-02-21 சனிக்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் தலைவர் செயிட் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வர்த்தக, வாணிப, கப்பல்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவிருந்தார். .மன்சூர் அவர்கள் தவிர்க்கமுடியாத காரணத்தினால் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இருந்த போதும் நிகழ்வு திட்டமிட்டபடி இடம்பெற்றது.

நிகழ்வுக்கு அதிதிகளாக சிரேஷ்ட ஊடகவியலாளரும் கல்வி அதிகாரியுமான ஏ.எல்.முக்தார் அவர்களும், சாய்ந்தமருது மாளிகைக்காடு உலமாசபை தலைவர் என்.எம்.முஜீப் அவர்களும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெப்பை அவர்களும் கலந்து கொண்ட அதேவேளை பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மன்றத்தின் அங்கத்தினர் கௌரவம் பெற்றோர் மாணவர்கள் பொதுமக்கள் என மண்டபம் நிறைந்த அபிமானிகள் வருகை தந்திருந்தனர்.

அத்துடன் கலாபூசணம் கே.எம்.ஏ.அசீஸ், பன்னூலாசிரியர் எம்.எம்.எம்.நூருல் ஹக், கவிஞர் எம்.எம்.ஜமால்தீன் ஆகியோர் இந்நிகழ்வில் பொன்னாடை மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன்போது நூறு மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்படவிருப்பத்துடன் மருதம் கலைக்கூடல் மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -