யாழ் இந்துக் கல்லூரியில் நாளை (08.02.2015) இரத்ததான முகாம் ..!!


யாழ்ப்பாண இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டினை அடுத்து நாளை அதாவது 08.02.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 02.00 மணிவரை யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்களான தமிழ் தேசிய இளைஞர் கழகம் தெரிவித்துள்ளது.

இரத்ததானம் செய்ய விரும்பிய கொடையாளர்கள் நாளைய தினம் (08.02.2015, ஞாயிற்றுக் கிழமை) இரத்ததான முகாமில் கலந்து கொள்ளமுடியும். அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களும் யாழில் பரவலாக மக்களுக்கு வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இரத்ததானம் செய்ய விரும்பியவர்கள் ஒழுங்கமைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள 076 6644 059, 077 0733 719, 077 5058 572, 071 880 9757, 075 7729 544 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -