சாய்ந்தமருது பிரதேச மத்ரஸாக்களுக்கிடையிலான மீலாதுன் நபி தினப் போட்டி



ஹாசிப் யாஸீன்-

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச மத்ரஸாக்களுக்கிடையிலான மீலாதுன் நபி தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் விசேட மார்க்க சொற்பொழிவும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று (07) சனிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் கலாச்சார பிரிவின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மௌலவி யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையளர் சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள், உலமாக்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மீலாதுன் நபி தினத்தின் மகிமைகள் பற்றி விசேட மார்க்க சொற்பொழிவினை மௌலவி யூ.ல்.எம்.தௌபீக் நிகழ்த்தினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -