சம்மாந்துறையில் குடிசை ஒன்று திப்பற்றியதில் 2வர் பலி!



அபூ-இன்ஷாப் , முஹம்மட்,யு.எல். எம்.றியாஸ்-
ம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி-01 இஸ்மாயீல்புரம் சுனாமி வீட்டுத்திட்டப் பிரதேசத்தில் இன்று (30) நள்ளிரவு குடிசை ஒன்று திப்பற்றியதில் தந்தை, மகன் பலி, மகள் எரிகாயங்களுடன் அம்பாறை பொது வைத்திய சாலையில் அனுமதி.

இந்த சம்மபவத்தில் சின்னத்தம்பி ஆதம்லெப்பை வயது – 43, மகன் ஆதம்லெப்பை றிஸான் வயது- 02 ஆகியோர்  குடிசையினுள்ளே மரணமடைந்துள்ளனர் .

மகளான ஆதம்லெப்பை றியா வயது – 05 என்பவர் தீக்காயங்களுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இது ஒரு திட்டமிட்ட செயல் என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் அத்துடன் மரணமடைந்தவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றச் சம்பவம் ஒன்றிற்காக எதிர்வரும் மாதத்தில் நீதீமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கொன்றில் சாட்சியாக உள்ளார் எனவும் அப்பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்பாக அப்பிரதேசத்தில் பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய  நியாஸ் வயது -45 எம்பவர் சம்மாந்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டள்ளார்.

மேலும் இந்ந சம்மபவம் தொடர்பான விசாரனைகளை சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் சொக்கோ புலனாய்வு அதிகாரிகள் சகிதம் விசாரனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -